மன்னாரில் மற்றுமொரு ஊடகவியலாளருக்கு சியாத் இயக்கம் கொலைமிரட்டல்
Read Time:1 Minute, 13 Second
மன்னாரில் மற்றுமொரு ஊடகவியளாருக்கு சியாத் இய்க்கம் என்ற பெயரில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏ.எஸ்.எம்.பஸ்மி என்பவருக்கே நேற்றுமுன்தினம் மாலை இவ்வாறு கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றம்மீது கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின்போது சம்பவ இடத்தில் நின்று செய்திகளை சேகரித்த மன்னார் மாவட்டத்தின் பிராந்திய ஊடகவியலாளர்கள் மூவருக்கு எதிராக கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சியாத் இயக்கம் என்ற பெயரில் கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி ஊடகவியலாளர்கள் கொலை மிரட்டல் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். இந்நிலையிலே மேற்படி பஸ்மி என்பவருக்கும் கொலை மிரட்டல் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Average Rating