அல்ஜீரிய பணயக் கைதிகளில் பலர் பலி
Read Time:56 Second
நான்கு நாட்களாக நீடிக்கப்பட்ட அல்ஜீரிய பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அல்ஜீரியாவின் எண்ணெய் படுகை ஒன்றில் பணியாற்றி வெளிநாட்டு பிரஜைகளை இஸ்லாமிய தீவிரவாதிகள் கடத்தி பணயமாக வைத்துக் கொண்டனர்.
பணயக் கைதிகளை மீட்கும் முயற்சியின் போது 23 பணயக் கைதிகளும், 32 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் ஐந்து பிரித்தானியர்கள் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா உள்ளிட்ட பலர் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.
Average Rating