திருமண மோசடிகாரி சஹானாசுக்கு பெண்குழந்தை!!!
பல ஆண்களை ஏமாற்றி திருமண மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சஹானாசுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கணவர் தன்னையும் குழந்தையையும் ஏற்க மறுத்தால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று சஹானாஸ் தெரிவித்துள்ளார். கேரளாவை சேர்ந்த இளம்பெண் சஹானாஸ் தங்களை ஏமாற்றி லட்சக்கணக்கான பணத்தை கையாடல் செய்ததாக முகலிவாக்கம் மணிகண்டன், சினிமா இயக்குனர் ராகுல், புளியந்தோப்பு கால்பந்து வீரர் பிரசன்னா உள்பட 8 பேர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
புகாரை தொடர்ந்து சஹானாஸ் தலைமறைவானார். சாஸ்திரி நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தனிப்படையினர் கடந்த செப்டம்பர் 3ம் தேதி பெங்களூரில் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டபோது சஹானாஸ் 3 மாத கர்ப்பமாக இருந்தார். பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த டிசம்பர் 18ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்த சஹானாஸ் டிசம்பர் 26ம் தேதி ஒரு புகார் அளித்தார். அதில், “தனது கர்ப்பத்துக்கு பிரசன்னாதான் காரணம். அவருடைய அம்மாவும், அப்பாவும் நான் பிரசன்னாவுடன் சென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். வேறு பெண்ணை பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாகவும் கூறி வருகின்றனர். எனது கணவர் பிரசன்னாவுடன் என்னை சேர்த்து வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்ÕÕ என்று கூறியிருந்தார். இந்த புகார் விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் சஹானா சுக்கு தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து, சஹானாஸ் கூறியதாவது: சென்னையில் தோழியின் வீட்டில் தங்கியுள்ளேன். எதிர்காலமே புரியாமல் தவிக்கிறேன். பிரசன்னா என்னை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். 50 பேரை திருமணம் செய்ததாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. உன்னுடன் நான் எப்படி வாழ்வது. உன்னுடன் வாழ எனது பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அந்த எதிர்ப்பை மீறி எப்படி உன்னை நான் ஏற்றுக் கொள்ள முடியும் என்று பிரசன்னா கூறி வருகிறார்.
உண்மையில் நான் 50 பேரை ஏமாற்றவில்லை. இதை அவருக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறேன். அதில், விரைவில் வெற்றி பெறுவேன். குழந்தை பிறந்த விஷயம் பிரசன்னாவுக்கு தெரியும். குழந்தையை என்னிடம் கொடுத்துவிடு. நீ வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார். கணவர் என்னையும், குழந்தையையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நாங்கள் இருவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என்றார்.
Average Rating