ஐ.நா மனித உரிமை ஆணையாளர் தொடர்பில் வெளிவிவகார பதில் செயலர் விசனம்
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சர்வதேச சிவில் சேவையாளருக்கு ஏற்புடையதல்லாதவாறு செயற்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் பதில் செயலர் சேனுகா செனவிரட்ண தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் செயற்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்டிருந்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையிலே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். குற்றவியல் செயற்பாடு பக்கசார்பாக இடம்பெற்றதாக மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார். இதன்மூலம், முன்னாள் பிரதம நீதியரசரின் இறைமைக்கு களங்கம் ஏற்பட்டிருப்பதாகவூம் அவர் குறிப்பிட்டிருந்தார். அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றௌம். நவநீதன்பிள்ளை கட்டுப்பாட்டை மீறி செயற்படுகிறார். அவர், அண்மைக்காலமாக இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வந்தார். எனினும்இ குற்றவியல் செயற்பாடு தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எழுத்துமூலம் தெளிவூப்படுத்தியூள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating