சிறிதரன் எம்பிக்கு சோதனை மேல் சோதனை!
Read Time:1 Minute, 6 Second
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் அலுவலகம் இன்று (22) இரண்டாவது தடவையாகவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காலை 9.45 மணிமுதல் சுமார் 3 மணி நேரம் இந்த சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றதாக சிறிதரன் எம்பி தெரிவித்தார். சிறிதரனின் செயலாளர் பொன்காந்தன் கைது செய்யப்பட்டதை சோதனையிட வந்தவர்கள் சிறிதரன் எம்பியிடம் உறுதி செய்துள்ளனர். கொழும்பு பயங்கரவாத குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த பொறுப்பதிகாரி சரத் சந்திர என்பவரது தலைமையில் அறுவர் கொண்ட குழுவினரே சோதனைக்கு வந்ததாகவும் அலுவலகத்தில் உள்ள தனது மடிக்கணினியை அவர்கள் எடுத்துச் சென்றதாகவும் சிறிதரன் தெரிவித்தார்.
Average Rating