போர் குற்றம் புரிந்த இலங்கை இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா விசா மறுப்பு!
இலங்கை இராணுவத்தினர் சிலருக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளைக் கொடுக்க முன்வந்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைவாக சில இராணுவ அதிகாரிகள் அமெரிக்கா செல்லவிருந்தனர். மேஜர் ஜெனரல் சுடந்த ரணசிங்க என்னும் அதிகாரியும் அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவரது விசா மறுக்கப்பட்டதோடு, குறிப்பிட்ட அதிகாரிக்கு அமெரிக்கா பயிற்ச்சிகளை வழங்காது என்றும் அறிவிக்கப்பட்டது. 2009ம் ஆண்டு போர் நடைபெற்றவேளை 53ம் படைப் பிரிவினரே, பல படுகொலைகளை மேற்கொண்டிருந்தனர். எனவே இதன் அடிப்படையில் ரணசிங்க 53ம் படையணியில் இருந்ததால் தாம் அவருக்கு பயிற்ச்சி வழங்க முடியாது என்று அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் ரணசிங்க 53ம் படையணியில் இருக்கவில்லை என்று அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு கோட்டபாய எடுத்துரைத்துள்ளார். இதனையடுத்து அமெரிக்க தூதரக அதிகாரிகள் பிழை ஒன்று நடந்துவிட்டதை ஒப்புக் கொண்டனர் என இலங்கை பாதுகாப்பு அமைச்சின் தகவல் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.
Average Rating