காத்தான்குடியில் பாம்புமழை
Read Time:1 Minute, 6 Second
மட்டக்களப்பு காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்றுகாலை பாம்புமழை பெய்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி, காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே பாம்புமழை பெய்துள்ளது. காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள வீட்டு வளாகமொன்றிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள வீட்டு வளாகமொன்றிலுமே இப்பாம்பு மழை பெய்துள்ளது. தான் வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது மழையூடன் சேர்ந்து இரு பாம்புகள் வந்து விழுந்ததாகவூம் அதில் ஒரு பாம்பு தனது தோள்மீது விழுந்து ஓடியதாகவூம் ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்ணொருவர் கூறியூள்ளார்.
Average Rating