பத்ம பூஷன் விருதை புறக்கணித்தார் பாடகி எஸ்.ஜானகி
Read Time:1 Minute, 18 Second
பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி புறக்கணித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த ஜானகி, பத்ம விருதுகள் வழங்கப்படுவதில் வட இந்தியர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. இவ்விடயத்தில் தென்னிந்தியர்கள் புறக்கணிக்கப்படுவது தமக்கு மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தான் மிகவும் ஏமாற்றமடைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வழங்கப்பட்ட பத்ம பூஷன் விருதை புறக்கணிப்பதாகவும் ஜானகி தெரிவித்துள்ளார். 74 வயதான எஸ். ஜானகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating