அரசியல் கட்சிகளைப் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் தீவிரம்
இலங்கையிலுள்ள சகல அரசியல் கட்சிகளையூம் பதிவூ செய்யூம் நடவடிக்கைகள் உரிய முறையில் இடம்பெறுவதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேர்தல் யாப்பின் அடிப்படையில் சொத்துக்கள் தொடர்பான பிரகடனங்கள் மற்றும் வருடாந்த அறிக்கைகளை சமர்ப்பித்த அரசியல் கட்சிகளின் பெயர்ப் பட்டியலை எதிர்வரும் 31ம் திகதி வெளியிடப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சிகளின் செயலர்களினால் இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக எதிர்வரும் 31ம் திகதிவரை கால அவகாசம் வழங்கும்படி கோரிக்கை விடப்பட்டிருந்தது. இதனை முன்னிட்டு இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவையான தகவல்களை வழங்காத அரசியல் கட்சிகளின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படவூள்ளது. இலங்கையில் இதுவரை 64 அரசியல் கட்சிகள் தேர்தல் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட்டுள்ளன என்றும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Average Rating