யாழ் பல்கலைக் கழக மாணவி எரிகாயங்களுடன் மீட்பு
Read Time:1 Minute, 10 Second
யாழ். பல்கலைக்கழக மாணவியொருவர் எரிகாயங்களுடன் குற்றுயிராக மீட்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்றுகாலை எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பல்கலைக்கழக மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இரண்டாம் தரத்தில் பயிலும் 22வயதான எஸ்.துளசிக்கா என்ற மாணவியே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ். புகையிரத நிலைய வீதியில் எரியூண்ட நிலையிலிருந்த குறித்த மாணவியை மீட்டுள்ள இப்பகுதி மக்கள் அவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன் யாழ். பொலிஸாருக்கும் தவகல் வழங்கியூள்ளனர்.
Average Rating