மத ஒற்றுமையை நிலைநிறுத்த நடவடிக்கை
Read Time:1 Minute, 15 Second
தேசிய மற்றும் மத ஒற்றுமையை நிலைநிறுத்த தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் சகல கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்படும் என அமைச்சர்; நிமால் சிறிபாலடி சில்வா குறிப்பிட்டுள்ளார். மஹியாங்களையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தேசியத்திற்கும், மதத்திற்கும் இடையிலான ஒன்றுமை மிக முக்கியம். எனினும், இன்று அதனைக் குழப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனிடையே நாடாளுமன்றில் அனைத்து கட்சி பிரதிநிதிகளை கொண்ட விசேட குழுவொன்றை அமைந்து, அதனுடான இதற்கு தீர்வை பெற நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating