ஆசிரியர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் அதிகரிப்பு
Read Time:1 Minute, 27 Second
பாடசாலை ஆசிரியர்கள்மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு பாலியல் குற்றச்சாட்டுக்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார்கள் என பிரதி கல்வியமைச்சர் விஜத விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார். சிறுவர்மீதான பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மகளிர் விவகார அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஆகியவையூடன் இணைந்து கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்கவூள்ளதாகவூம் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசியர் ஒருவர்மீது பாலியல் குற்றம் தொடர்பான முறைப்பாடு மேற்கொள்ளப்படுமானால் அக் குற்றச்சாட்டு உண்மையானதா அல்லது பொய்யானதா என ஆராயூம் முன்னர் அவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்படுவார் எனவூம் பின்னரே அது தொடர்பில் விசாரணைகள் இடம்பெறும் எனவூம் அமைச்சர் சுட்டிக்காட்டியூள்ளார்.
Average Rating