தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது -வெளிவிவகார அமைச்சர்
Read Time:1 Minute, 1 Second
இலங்கை விடயத்தில், புலம்பெயர் தமிழர்களின் அழுத்தங்களுக்கு பணிந்து சர்வதேசம் செயற்படக் கூடாது என வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியாவூக்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் இந்திய தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் வாழும் நாடுகளுக்கு, இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்கின்றனர். எவ்வாறாயினும் தமது நாட்டின் உள்விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளபோவதில்லை என அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating