கொக்காட்டிச்சோலை படுகொலை தினம் அனுஸ்டிப்பு
Read Time:1 Minute, 17 Second
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையில் நேற்றுபிற்பகல் கொக்கட்டிச்சோலை படுகொலைதின அனுஷ்டிப்பு உணர்வூபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இந்நிகழ்வூகள் இடம்பெற ஏற்பாடாகியிருந்தது. எனினும் நிகழ்வூ இடம்பெறவிருந்தகலாசார மண்டபம் பொலிஸாரால் பூட்டப்பட்டு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றிலில் நிகழ்வூ இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவூ இறால் பண்ணையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் பெருமளவான உறவினர்களும் கலந்துகொண்டனர். நினைவூஒளி ஏற்றப்பட்டு ஆலய பிரதம குருவின் ஆத்மசாந்தி பிரார்த்தனையூடன் நிகழ்வூ ஆரம்பமானது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் பெருமளவூ மக்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.
Average Rating