வரக்காபொல விபச்சார விடுதி முற்றுகை: 6பெண்கள், 2ஆண்கள் கைது
Read Time:1 Minute, 3 Second
வரக்காபொல – அம்பேபுஸ்ஸ கண்டி வீதியில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று வரக்காபொல பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது. நேற்று (29) மாலை மேற்கொண்ட இந்த சுற்றிவளைப்பின் போது குறித்த விபச்சார விடுதியில் இருந்து 6 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப்பெண்கள் பெலிகல, கனேவல்பொல, மாத்தறை, கண்டி மற்றும் ருவான்வெல்ல ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். அத்துடன், குறித்த விபச்சார விடுதியில் இருந்த கேகாலை மற்றும் தலவத்தேகெதர பகுதியைச் சேர்ந்த இரு ஆண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (30) வரக்காபொல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
Average Rating