பள்ளி மாணவியை கற்பழித்த காமுகன் எய்ட்ஸ் நோயாளி
Read Time:1 Minute, 18 Second
அசாம் மாநிலம் பதர்பூர் அடுத்த சில்சார் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (15). இவர் அதிகாலையில் வீட்டை விட்டு வெளியே சென்றபோது 5 பேர் கும்பல் மயக்க ஸ்பிரே அடித்து அங்குள்ள கட்டிடத்திற்கு கடத்தி சென்றது. பின்னர் அக்கும்பல் வைஷ்ணவியை கற்பழித்தது. இதில் அவர் மயக்கம் அடைந்தார். இதில் பயந்து போன அக்கும்பல் அவளை பதர்பூர் ரெயில் நிலையம் அருகே வீசி விட்டு தப்பி சென்றது. இதுபற்றி பதர்பூர் பொலிசார் வழக்குப்பதிவு செய்து ஒரு வாலிபரை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் எய்ட்ஸ் நோயாளி என்பது தெரிய வந்தது. மற்ற 4 பேரை பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இதில் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால், கற்பழித்தது போக மேற்படி இந்த 15 வயது மாணவி எய்ட்ஸ் நோய் தாக்கத்துக்கும் உள்ளாகியிருப்பார் என்று சந்தேகிக்கப்படுகிறது.
Average Rating