யாழில் 15வயது சிறுமியைக் கடத்தியவர் சிறுமியூடன் பொலீசில் சரண்
யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்திய இளைஞன் சிறுமியூடன் யாழ் பொலிஸ் நிலையத்தில் நேற்றிரவூ சரணடைந்துள்ளதையடுத்து அவ் இளைஞன்மீது கடத்தல் மற்றும் பாலியல் வல்லுறுவூ வழக்கு இன்று பதிவூசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக சிறுமியை கடத்தியதாகவூம் அச்சிறுமியின் பெற்றௌர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையியாலேயே சிறுமியை கூட்டிச் சென்றதாக குறித்த இளைஞன் யாழ். பொலிஸ் நிலையத்தில் தனது வாக்குமூலத்தை பதிவூ செய்துள்ளார். யாழ் பெனடிக் வீதியைச் சேர்ந்த 21 வயதான சுரேஸ் என்பவரே பொலிஸில் சரணடைந்துள்ளார். ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாதநபர்களே அருள்நேசன் ஆருனியா (வயது 15) என்ற சிறுமியை கடந்த செவ்வாய்க்கிழமை செம்மணி பகுதியில் வைத்து கடத்தியூள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த இளைஞன் சிறுமியூடன் காதல்தொடர்பு கொண்டிருந்ததாக விசாரணைகளில் இருந்து தெரிய வருகின்றது. இந்நிலையில் சிறுமி வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
Average Rating