மாணவியை துஷ்பிரயோகிக்க முயற்சித்த பாடசாலை சிற்றூழியர் கைது

Read Time:1 Minute, 31 Second

arrest1பிரபல ஆரம்பப் பாடசாலை மாணவியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டின்பேரில் பாடசாலைச் சிற்றூழியர் ஒருவர் இன்று யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி 4ம் தரத்தில் கல்வி கற்றுவருபவர். நேற்றுபகல் வேளையில் பாடசாலைக்குள் வைத்தே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவி தனது உறவினர்களுடன் தங்கி நின்று கல்விகற்று வருகின்றார். நேற்று நடைபெற்ற சம்பவத்தை அடுத்து குறித்த மாணவி தனது உறவினர்களுக்கு தெரியப்படுத்தியூள்ளார். அதனையடுத்து இன்றுகாலை உறவினர்களால் சம்பவம் தொடர்பில் அதிபருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் அங்கு கூடியிருந்த பெற்றௌர்களாலும் குறித்த நபர் தாக்கப்பட்டார். பின்னர் அதிபரினால் யாழ். பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை சம்பவத்தையடுத்து மாணவி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வவூனியா முதல் யாழ்வரை 30 படைமுகாம்கள்
Next post மாதம் ஒரு லட்சம் ரூபா சம்பாதிக்கும் பிச்சைக்காரி கைது