புலிகளுடன் தொடர்புடைய, கனடா சன்சீ கப்பல் இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்
2010ம் ஆண்டு சன்சீ கப்பல்மூலம் கனடாவூக்கு சென்ற இலங்கையர் இன்னும் இரு வாரங்களில் நாடுகடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்கியூள்ளார் எனினும் இதனை தடுக்க கனடாவின் புதிய சட்டம் தடையாகவூள்ளது என குறித்த இலங்கை அகதியின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் குறித்த அகதியின் புகலிடக் கோரிக்கையை கனேடிய அரசாங்கம் மூன்று தடவைகள் நிராகரித்துள்ளது. 2010ம் ஆண்டு கனடாவூக்கு சென்ற குறித்த அகதிஇ பிரிட்டிஸ்’ கொலம்பியாவில் இருந்து ரொடன்டோவூக்கு அனுப்பப்பட்ட பின்னர் 6 மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார் இதன்பின் அண்மைக்காலம் வரையில் அவர், கட்டிட தொழில் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார் தமது கோரிக்கை இரண்டு தடவைகள் நிராகரிக்கப்பட்டநிலையில் தற்போது கனேடிய அரசாங்கம் மூன்றாவது தடவையாகவூம் இலங்கை அகதிக்கு நாடு கடத்தல் உத்தரவை பிறப்பித்துள்ளது. இது எதிர்வரும் பெப்ரவரி 13ம் திகதிக்கு முன்னர் இடம்பெற வேண்டும் என்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனினும் இதற்கு எதிராக மேன்முறையீடு செய்யப் போவதாக இலங்கை அகதியின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.
Average Rating