மகா பராக்கிரமபாகு மன்னன் யுக சிவன் கோயில் வளவில் புதையல்..
Read Time:1 Minute, 15 Second
மகா பராக்கிரமபாகு மன்னன் யுகத்தில் கட்டப்பட்டதாக வரலாறு கூறும் பொலன்னறுவை சிவன் ஆலயத்தின் சிவலிங்கம் இருக்கும் இடத்தில் காணப்படும் கல் சிலேட்டு அகற்றப்பட்டு அங்கு மூன்று அடி குழி பறித்து இனந்தெரியாத சிலர் புதையல் அகழ்ந்துள்ளனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பொலன்னறுவை பொலிஸ் நிலைய விசேட குழு இன்று (02) காலை அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. நேற்று (01) இரவு இந்த புதையல் அகழ்வு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவன் கோயிலுக்கு அருகில் கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் புதையல் அகழ்வு இடம்பெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க குறித்த சிவன்கோயில் பகுதிக்கு இரவில் காவலாளி இல்லாததால் இவ்வாறு புதையல் அகழ்வு இடம்பெறுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
Average Rating