இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் மின்சார விநியோகம்
இவ்வருட இறுதிக்குள் சகலருக்கும் தடங்கலற்ற மின்சார விநியோகம் வழங்குவதே தமது இலக்கென்று மின்வலு சக்தி அமைச்சராக நேற்று முன்தினம் புதிதாக பதவியைப் பொறுப்பேற்றுள்ள பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். மின்சார சபை எதிர்கொண்டுள்ள நிதி நெருக்கடியை மட்டுப்படுத்தவூம் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் அவர் கூறியூள்ளார். மின் உற்பத்திக்கான செலவை குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க சகலரும் இணைந்து செயற்பட வேண்டும். 2013ம் ஆண்டு இறுதிக்குள் நாட்டில் அனைவருக்கும் மின்சார வசதி அளிப்பதே எமது பிரதான இலக்காகும். மின் உற்பத்திக்கான செலவைக் குறைத்து அதன் பயனை மக்களுக்கு வழங்க சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும். அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கை போன்ற நாட்டில் தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்க முடியாவிட்டால் அதனால் பொருளாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படும். மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சார வசதி வழங்க தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Average Rating