டெல்லி மாணவி பாலியல் வல்லுறவு போலவே மீண்டும் ஒரு சம்பவம்
Read Time:1 Minute, 24 Second
டெல்லியில் மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தை போலவே ஒரு சம்பவம் பெங்களூருவிலும் அரங்கேறியுள்ளது. வீடு திரும்ப பேருந்திற்காக காத்து கொண்டிருந்த 19 வயது மாணவியை அடையாளம் தெரியாத 3 நபர்கள் லிங்கராஜபுரம் மேம்பாலம் அருகே இருந்த புதர்களுள் இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். தன்னை பாதுகாத்துக் கொள்ள போராடிய மாணவியை மூவரும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் பெங்களூரு காவல்துறையின் துணை ஆணையர் சுனில் குமார் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை விசாரிக்கையில் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய மூவருள் ஒருவரை தனது வீட்டின் அருகே பார்த்திருப்பாதாக கூறியுள்ளார் என தெரிவித்தார்.
Average Rating