ஒலுவில் கடற்பரப்பில் மீட்கப்பட்ட வெளிநாட்டவர்களை தடுப்பு முகாமில்
Read Time:59 Second
அம்பாறை மாவட்டம் ஒலுவில் கடற்பரப்பில் படகு உடைந்து ஆபத்தான நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது கடற்படையினரால் மீட்கப்பட்ட பங்களாதேஷ், மியான்மார் பிரஜைகள் 138பேரை கொழும்பு மிரிஹான தடுப்பு முகாமுக்கு அனுப்புமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்களுள் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்நிலையில் குறித்த நபர்களை அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 22ம் திகதிவரை மிரிஹானையிலுள்ள வெளிநாட்டு பிரஜைகளை தடுத்து வைக்கும் இடத்துக்கு அனுப்புமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Average Rating