வவுனியாவில் தாயும் – மகனும் கைது!
Read Time:55 Second
வவுனியா – உக்கிளாங்குளத்தில் உள்ள வர்த்தகர் ஒருவரின் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் அவ்வீட்டில் பணியாற்றி வந்த பணிப்பெண்ணும் அவருடைய மகனும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். வர்த்தகரின் வீட்டில் இருந்து ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பணத்தினை வீட்டில் பணியாற்றி வரும் பெண் தனது மகனுடன் சேர்ந்து திருடியதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளதாகவும் இதன் நிமிர்த்தம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாரே இன்று (05) இருவரையும் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating