அவ்வாறான தொலைபேசி அழைப்பு, குறுந்தகவல் உங்களுக்கும் வருகிறதா?

Read Time:1 Minute, 43 Second

stupid-peopleதனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் அதிஸ்டலாப சீட்டிலுப்பு நடாத்தப்படுவதாக கூறி கணக்கு இலக்கங்களுக்கு பணம் செலுத்துமாறு தொலைபேசி மற்றும் குறுந்தகவல் மூலம் நிதி மோசடி செய்யும் குழு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சில தனியார் நிறுவனங்களில் குறிப்பாக தொலைபேசி நிறுவனங்களில் போட்டி நடாத்தி பரிசுகள் வழங்கப்படுகிறன்றன.

எனினும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பொது மக்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி பணம் பறிக்கும் குழுவொன்று தமது செயற்பாட்டை மறைமுகமாக முன்னெடுத்து வருகிறது.

போட்டியில் பெறுமதியான பரிசு பெற்றுள்ளதாகவும் அதனைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவுக் கட்டணம் அனுப்பி வைக்குமாறும் கோரி நிதி மோசடி செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறான நபர்களின் நடவடிக்கைகள் குறித்து பொது மக்கள், விசேடமான இணையம், தொலைபேசி பாவிக்கும் பிரிவினர் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவகம் அறிவுறுத்தியுள்ளது.

அவ்வாறான சம்பவங்கள் ஏதும் இடம்பெற்றால் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறையிடுமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காலி மாநகர சபை ஊழியருக்கு கழுத்து வெட்டு
Next post (VIDEO) சனல் 4 வெளியிடவுள்ள காணொளி -Trailer-