இந்திய சிற்பி மீது தாக்குதல்
Read Time:51 Second
மொனராகலையில் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசியாவின் மிகப்பெரிய கருங்கல் சிலையை செதுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய சிற்பியொருவரை தாக்கியதாகக் கூறப்படும் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இச்சிலை செதுக்கும் வேலையை மேற்பார்வை செய்யவென இலங்கைக்கு வந்த 10 சிற்பிகளுடன் தாக்கப்பட்டவரும் ஒருவராவார். 42 வயதான சென்னையைச் சேர்ந்த இந்த நபர் ஒரு தனிப்பட்ட தகராறு காரணமாக அங்கு வசிக்கும் 3 இளைஞர்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating