புத்தளத்தில் மாணவி வல்லுறவூ உப அதிபர் கைது
Read Time:1 Minute, 19 Second
தனது பாடசாலையில் கல்விபயிலும் 7வயது மாணவியை பாலியல் வல்லுறவூக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் உப அதிபர் ஒருவர் புத்தளம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். மதுரங்குளி கந்ததொடுவாவ பகுதி பாடசாலையில் பணியாற்றும் 38 வயதுடைய உப அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த மாணவி நேற்று முன்தினம் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மாணவியை ஏற்றிக கொண்டு பாழடைந்த இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவூக்கு உட்படுத்தியூள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவூள்ளார். புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating