ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டம்
Read Time:58 Second
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 22பேர், இந்திய பொலீசாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தமிழகம் புதுச்சேரி ரயில் நிலையத்திற்கு அருகாமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசாங்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தை கைவிடுமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வழிபாடுகளுக்காக எதிர்வரும் 10ம் திகதி திருப்பதிக்கான விஜயம் செய்யவூள்ளார்.
Average Rating