மட்டக்களப்பு மாணவன் உலகசாதனை! இலங்கையை ஒரு கணம் வியக்க வைத்தது!
பட்டிருப்பு தேசியபாடசாலையில் தரம் – 12 விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் திவ்வியராஜ் சயந்தன் உலக வங்கியினால் இணையமூலம் நடாத்தப்பட்ட“Global Picture Contest “ எனும் போட்டியில் வெற்றி பெற்று உலக சாதனை புரிந்துள்ளார். இவர் களுவாஞ்சிகுடி, சக்கடத்தார் வீதியில் வசித்து வருகிறார். “Global Picture Contest “எனும் போட்டி ஆபிரிக்கா, கிழக்குஆசியா /பசுபிக், மத்தியஆசியா /ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா /கரிபியன், மத்தியகிழக்கு / வடஆபிரிக்கா, தென்ஆசியா எனும் 6 பிராந்தியங்களாக நடாத்தப்பட்டது. இப் பிராந்தியங்களில் தெற்காசியப் பிரிவில் திவ்வியராஜ் சயந்தன் பரிசு பெற்றுள்ளார். இவர் பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலக கணனி வள முகாமையாளர் செல்லத்துரை – திவ்வியராஜ் – ஆசிரியர் அனுசூயா அவர்களின் சிரேஸ்ட புதல்வராவார். இவர் தன்னால் போட்டிக்கு அனுப்பப்பட்ட புகைப்படத்திற்கு பின்வருமாறு விளக்கமும் அளித்துள்ளார். “இலங்கையின் களுவாஞ்சிகுடிக்கும் கல்முனைக்குச் செல்லும் பிரதான வீதியின் களுவாஞ்சிகுடியில் தெருவோர வியாபாரிகள் நிறையப்பேர் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றவர்களுள்; தனது வீட்டுவறுமை காரணமாக தேங்காய் விற்கும் சிறுவனும் ஒருவன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating