இலங்கை மீனவர்கள் ஐவர் ஆந்திராவில் கைது
Read Time:53 Second
இலங்கை மீனவர்கள் ஐவர் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணபட்டினம் பிரதேசத்தில் வைத்து இலங்கை மீனவர்கள் ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இவர்கள் ரணில் புத்தா என்ற படகில் சென்றுள்ளதாக கடலோர பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து இலங்கை மீனவர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை ஐந்து படகுகளும் இந்திய கடலோர பாதுகாப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
Average Rating