இந்திய ஊடகவியளார்களுக்கு ஜனாதிபதி மஹிந்த அழைப்பு
Read Time:1 Minute, 4 Second
இலங்கையின் தற்போதை நிலையை பார்வையிட இந்திய ஊடகவியலாளர்களை நாட்டிற்கு வருகை தருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்கள் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். ஜனநாயக நாடொன்றில் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது வழமையானது என ஜனாதிபதி அதற்கு பதிலளித்ததாகவும், அத்துடன் ஜனாதிபதியின் இந்திய விஜயத்தையொட்டி பாதுகாப்பு வழங்கி இந்திய மத்திய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating