வவுனியாவில் பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு
வவுனியாவில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் வீட்டில் இருந்து வயலுக்குச் சென்ற ஒருவர் காணமல் போயிருந்தார். பன்றிக்கு வைத்த மின்சாரப் பொறியில் சிக்கி முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. இவ்வாறு காணமல் போனவர் தாலிக்குளம் வயல் பகுதியில் இருந்து நேற்று சடலமாக வவுனியா காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு மீட்கப்பட்டவர் மூன்று பிள்ளைகளின் தந்தையான செக்கட்டிப்புலவைச் சேர்ந்த 53 அகவையுடைய சின்னத்தம்பி யோகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். வயலுக்குள் பன்றிக்காக வைத்த மின்சாரக்கம்பியினாலே மின்சாரம் தாக்கிப் பலியாகியதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரத்தினைப் பொருத்தியவர்கள் தொடர்பிலும் மரணம் தொபடர்பிலும் மேலதிக விசாரணைகளை வவுனியா காவல்துறை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த வாரமும் குறித்த வயல்பகுதியில் இருந்து ஒரு முதியவரின் சடலம் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Average Rating