கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் விபத்து! பெண் படுகாயம்
Read Time:51 Second
கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண்ணொருவர் படுகாயமடைந்து கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்து இன்று காலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. டிப்பர் வாகனமும் பயணிகள் பஸ்சும் மோதிக் கொண்ட நிலையில் வீதியால் சென்று கொண்டிருந்த குறித்த பெண் படுகாயமடைந்நதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating