இந்தியப் பிரதமர் மீது தமிழக முதல்வர் குற்றச்சாட்டு
Read Time:1 Minute, 20 Second
இலங்கை தொடர்பில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்ச்சியான மென்மையான போக்கினையே கடைபிடித்துவருவதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்களுக்கு உரிய தீர்வினை வழங்க இலங்கை தொடர்ந்தும் பின்னிற்கிறது. இதற்கு எதிராக பலதடவைகள் எச்சரிக்கைகள் விடுத்துள்ள போதும், அவற்றை அரசாங்கம் பொருட்படுத்துவதாக இல்லை. இந்த நிலையிலும், இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்திய மத்திய அரசாங்கம் மென்மையான போக்கினையை கடைபிடித்து வருகிறது. இதனை இனியூம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜெயலலிதா ஜெயராம் தெரிவித்துள்ளார் இந்நிலையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாட்டில் இந்தியா புதிய பிரேரணை ஒன்றை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Average Rating