8 முறை திருமணம் செய்த 26 வயது இளைஞன் மீது புகார்!

Read Time:1 Minute, 45 Second

ANI.Boy.cocukமத்தியப்பிரதேசம் மாநிலம் பதேரா தோலா கிராமத்தை சேர்ந்த உமேந்திர பிரசாத் மஹ்ரா என்ற 26 வயது இளைஞன் கடந்த பிப்ரவரி மாதம் 7-ம் திகதி திருமணம் செய்தார். இது அவருக்கு 8-வது திருமணம் ஆகும். இதை எதிர்த்து அவரது 6-வது மனைவி தேவகி பாய் மஹ்ரா என்பவர், மத்தியப்பிரதேச பெண்கள் ஆணையத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-

கடந்த 2009ம் வருடம் செப்டம்பர் மாதம் உமேந்திர பிரசாத் மஹ்ரா என்னை திருமணம் செய்தார். என்னுடன் வாழ்ந்த வந்த அவர் சில மாதங்களுக்கு முன்னர் என்னை கைவிட்டுச் சென்றார். இந்நிலையில் அவர் 8-வது முறையாக ஒரு பெண்ணை திருமணம் செய்த செய்தி எனக்கு கிடைத்துள்ளது. உமேந்திராவை திருமணம் செய்த பின்னர் தான், அவருக்கு அதற்கு முன்பே 5 திருமணங்கள் நடந்துள்ள செய்தி எனக்கு தெரிய வந்தது.

திருமணத்திற்கு பிறகு, மனைவி கற்பிணியான உடன், அதை கலைக்கச் சொல்லி வலியுறுத்துவார். அப்படி கலைக்க மறுப்பவர்களை கைவிட்டு செல்வதை உமேந்திரா வாடிக்கையாக்கியுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இவ்வாறு அந்த புகாரில் தேவகி கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எதுவுமே தெரியவில்லை !!! (புது மாதிரியான கவர்ச்சிப் படங்கள்) -PHOTOS-
Next post இன்றைய ராசிபலன்கள்:10.02.2013