சுமார் ஏழு கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு
Read Time:1 Minute, 15 Second
வரி செலுத்தாது நாட்டிற்குள் எடுத்து வந்த சுமார் 7 கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்களை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியூள்ளனர். நேற்று இரவூ மற்றும் இன்றுகாலை மேற்கொண்ட தேடுதலின் போது இந்த சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தின் ராகம, கின்கெந்த பிரதேசத்தில் களஞ்சியசாலை ஒன்றில் ஆறு கோடி பெறுமதியான சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை விற்பனைக்கு தயாராக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் ஒரு கோடிக்கும் அதிக பெறுமதியான சிகரெட்டுக்கள் பிறிதொரு இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போதும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீசார் அறிவித்துள்ளனர்.
Average Rating