வலிகாமம் வடக்கில் படையினரின் ஹோட்டலை ஜனாதிபதி திறந்து வைக்க ஏற்பாடு
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் மயிலிட்டியில் படையினரால் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஹோட்டலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைமறுதினம் திறந்து வைக்கவூள்ளார். வலி.வடக்கில் மயிலிட்டிப் பகுதி கடந்த 23 வருடங்களாகப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது. இங்கிருந்து வெளியேற்றப்பட்ட தமிழ்மக்கள் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜனவரி 14ம் திகதி மயிலிட்டியில் படையினரால் அமைக்கப்பட்டிருந்த யோக்கட் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த மாத இறுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலியில் படையினர் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். தற்போது மயிலிட்டித் துறைமுகத்தை அண்மித்து படையினரால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டலை யாழ்ப்பாணத்துக்கு இரு நாள் பயணமாக செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைக்கவூள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Average Rating