மட்டக்களப்பில் வெள்ளைவேனில் கடத்தப்பட்ட சிறுவன் விடுவிப்பு
மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று இனம்தெரியாதோரினால் வெள்ளைவானில் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். புதிய காத்தான்குடி பரீட் நகர் பாம் வீதியில் வசிக்கும் சுஹைப் முகம்மது அர்ஹாம் எனும் 12வயது சிறுவனே கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இச்சிறுவன் சனிக்கிழமை புதிய காத்தான்குடி பதுறியா வீதியில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது வெள்ளை வானில் வந்த இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டுள்ளார். பின் இச் சிறுவனின் பெற்றௌர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் சிறுவனை காணவில்லையென முறைப்பாடு செய்துள்ளனர். காத்தான்குடி பொலிஸார் மற்றும் சிறுவனின் குடும்ப உறவினர்கள் சிறுவனை தேடிக் கொண்டிந்தபோது சிறுவன் சனிக்கிழமை பிற்பகல் வீடுவந்து சேர்ந்துள்ளான். இது தொடர்பாக சிறுவன் பொலிஸாருக்கு தெரிவிக்கையில் தன்னை ஆறு பேர் வெள்ளைவானில் கடத்திச் சென்றதாகவூம் மட்டக்களப்பு வழியாக கொண்டு சென்று மட்டக்களப்பிலுள்ள வாவியோரமாகவூள்ள வீதியோரத்தில் தன்னை தள்ளிவிட்டு சென்றதுடன் தனது சைக்கிளையூம் கீழே போட்டு விட்டு சென்றதாகவூம் தெரிவித்துள்ளான். இச் சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating