அவூஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்கள் புதிய கட்சி
Read Time:1 Minute, 17 Second
அவூஸ்திரேலியாவில் குடியேறிய இலங்கையர்கள் அங்கு அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்துள்ளனர். அவூஸ்திரேலிய எழுச்சிக் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கட்சியில் தற்போது ஆயிரத்து 500 உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர். இந்தநிலையில் எதிர்வரும் பிராந்தியத் தேர்தலில் 65 வேட்பாளர்களை நிறுத்த இந்தக் கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட டானியல் நல்லையா என்பவரினால் இந்த அவூஸ்திரேலிய எழுச்சிக் கட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவூஸ்திரேலியாவூக்குள் நுழைபவர்கள் அந்த நாட்டுக்கு விசுவாசமான முறையில் தம்மை மேம்படுத்து வதுடன் அவூஸ்திரேலியாவின் பொருளாதாரத்தையூம் கட்டி யெழுப்ப வேண்டும் என்ற முக்கிய கொள்கையை இந்தப் புதிய கட்சி கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating