மும்மொழி கொள்கையை செயற்படுத்தத் தவறிய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
Read Time:1 Minute, 17 Second
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் ஊடாக வெளியிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளையூம் செயற்படுத்த தவறிய நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் மெதிவக்க தெரிவித்துள்ளார். தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் பெயர் பலகைகள் மும்மொழியிலும் காட்சிப்படுத்த வேண்டும் என அரசகரும மொழிகள் ஆணைக்குழுவினால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் மும்மொழிகளிலும் பெயர் பலகைகளை காட்சிப்படுத்தாத பஸ்களை சுற்றிவளைப்பதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதுடன் இதற்காக சட்ட மா அதிபரின் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவூம் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Average Rating