யாழ். மீள்குடியேற்ற குறைநிறைகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு
அரசினால் யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளில் காணப்படும் குறைஇ நிறைகள் தொடர்பான அறிக்கையொன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்பு எம்.பி அப்பாத்துறை விநாயகமூர்த்தியினால் இவ் அறிக்கைஇ கையளிக்கப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்ற ஜனாதிபதிஇ அதனை யாழ். கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் உடன் கையளித்துள்ளார். யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுக்கூட்டம்இ யாழ் ரில்கோ ஹோட்டலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள்இ யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் காணப்படும் குறைஇ நிறைகளை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு செவிசாய்த்த ஜனாதிபதிஇ யாழ். மாவட்ட அபிவிருத்திக்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு தான் தயார் என்றும் நிறைவூபெறாத திட்டங்களை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.
Average Rating