பண்ணைக் கடலுக்குள் பஸ் பாய்ந்து விபத்து, ஐவர் படுகாயம்
Read Time:1 Minute, 18 Second
யாழ்ப்பாணம் பண்ணை கடலுக்குள் பஸ்ஸொன்று பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்றுமாலை 5.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து ஊறுகாவற்றுறைக்கு பயணித்துக் கொண்டிருந்த இ.போ.ச பஸ்ஸே விபத்துக்குள்ளாகியூள்ளது. பஸ்ஸின் சாரதியான சுதாகரன்இ நடத்துனர் சுப்பிரமணியம் பரமநாதன் (வயது 50) நாவலர் வீதி பகுதியைச் சேர்ந்த கோபாலு கணேசலிங்கம் (வயது 40) தெஹியத்த கண்டியைச் சோந்த பிரியாணி தம்மிகா (27) வேலணை சரவணை பகுதியைச் சேர்ந்த பரமலிங்கம் துவாரகா (வயளது 26) கரம்பன் ஊர்காவற்துறையைச் சேர்ந்த பிரேமானன் சந்தன (வயது 31) ஆகியோரே இந்த விபத்தின்போது படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Average Rating