சூறாவாளி புயலில் சிக்கித் திணறிய கனடிய பல்கலைக்கழகம்
Read Time:1 Minute, 2 Second
கனடாவில் வீசிய சூறாவளி புயலில் மிஸ்ஸி ஸிப்பி பல்கலைக்கழகம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளும் பலத்த சேதம் அடைந்தன. இந்தப் புயல்காற்றில் சிக்கிய ஹேட்டிஸடபர்க் மாநிலம் வீடு , கடை என எல்லா வகையிலும் சேதத்தைச் சந்தித்தது. முக்கிய சாலைகளில் வீசிய சூறாவளியால் வீட்டின் கூரைகள் பறந்தன. மரங்கள் கட்டிடங்களின் மீது சாய்ந்து அவற்றைச் சேதப்படுத்தின, சில வீடுகளில் ஜன்னல்கள் பெயர்ந்து விழுந்தன. மேலும் ஃபோல்ரெஸ்ட் மாவட்டத்திலும் மரியோன் மாவட்டத்தின் மேற்குப் பகுதியிலும் மக்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக அவசரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் எவரும் இறந்ததாகத் தகவல் இல்லை.
Average Rating