பிரான்சில் அரசு அலுவலகம் முன்பு வேலைவாய்ப்பு கேட்டு போராடியவர் தீக்குளித்து சாவு
பிரான்சு நாட்டில் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் வேலை இல்லாதோருக்கு அரசாங்கம் சில சலுகை வழங்குகிறது. இதை பெறுவதற்காக அரசு வேலைவாய்ப்பு தேடித்தரும் அலுவலகங்கள் முன்பு பெயர்களை பதிவு செய்ய மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் அங்குள்ள நான்தேஸ் நகரிலுள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தை டாஜமால் ஷாப்(43) என்பவர் அணுகி தனக்கு வேலை அல்லது வேலை இல்லாதோருக்கான சலுகை வழங்க வேண்டுமென கோரிக்கை வைத்தார். ஆனால் சலுகை ஏதும் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்யப் போவதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த அலுவலகம் முன்பு போலீசாரும், தீயணைப்பு படையினரும் குவிக்கப்பட்டு கண்காணித்தார்கள். என்றாலும் போலீசுக்கு அவர் டிமிக்கி கொடுத்து விட்டு அலுவலகம் முன்பு சென்று உடலில் தீவைத்தார். இதில் அவர் உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.
Average Rating