புங்குடுதீவு கணவன் மனைவிக்கிடையில் சண்டை; இரு பிள்ளைகள் பலி
கணவன் மனைவிக்கு இடையில் நடைபெற்ற சண்டை அவர்களுடைய பிள்ளைகள் இருவரின் உயிரைக் குடித்த பயங்கர சம்பவம் ஒன்று யாழ்.புங்குடுதீவுப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவது. யாழ்.புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தில் வசித்து வந்த கணவன் மனைவிக்கு இடையில் சண்டை நடப்பது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்துள்ளது. அதே போன்று நேற்று இரவு இருவருக்கும் இடையில் ஆரம்பமாகிய சண்டை இன்று அதிகலைவரை நீடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மனைவி தனது ஒன்றரை வயது மற்றும் 6 மாதக் குழந்தையையும் தூக்கிக் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்ச்சித்துள்ளார். இதன் போது குறித்த இரு குழந்தைகளும் உயிரிழந்துள்ளது. எனினும் தண்ணீரில் தத்தளித்த அக் குழந்தைகளின் தாய் மனம் மாறி அங்கிருந்து கற்பாறை ஒன்றினை பிடித்து உயிர் தப்பியுள்ளார். இரு குழந்தைகளின் இறப்பிற்குக் காரணமான குழந்தைகளின் தந்தையும் தாயும் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Average Rating