கருணா அம்மானின் சகோதரியிடம் பணம் கொடுத்தால் பட்டதாரிகட்கு நியமனம்! ஏனையவர் பாதிப்பு?

Read Time:4 Minute, 9 Second

mahinda-karuna-001இலங்கையில் அரசினால் வழங்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை நிரந்தரமாக அரச திணைக்களங்களில் உள்வாங்கப்படுவது குறித்து பல்வேறு அரசியல் சாயல்களும் அரசியல் பின்னணிகளும் இடம் பெற்று வருகின்றது என்பது உலகறிந்த உண்மையாகி விட்டது.அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரையில் ஆயிரக் கணக்கான பட்டதாரிகள் இதுவரையில் நிரந்தர நியமனத்தில் உள்வாங்கப் படாமையினால் அல்லலுறுவதை அவதானிக்க முடிகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான் கரைப்பகுதியில் அமைந்துள்ள வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவில் பட்டதாரி பயிலுனர்களாக 250 இற்கு மேற்பட்டோர் அனுமதிக்கப் பட்டனர். இவர்களுள் 150 இற்கு மேற்பட்டோர் நிரந்தர நியமனம் பெறும் பட்டியலில் உள்வாங்கப்பட்டு வேறு இடங்களுக்காகவும் கடமைகளுக்குச் சென்றுள்ளனர்.

பிரதியமைச்சர் முரளிதரனின் (கருணா அம்மானின்) சகோதரியிடம் பணம் கொடுத்தல் பட்டதாரிகட்கு நியமனம்
இது ஒரு புறமிருக்க இப்பிரதேச செயலாளர் காரியாலயத்தில் கடமை புரியும் (பயிலுனர் பட்டதாரியான குருமண்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்த கந்தன் -பெயர் மாற்றப்பட்டுள்ளது-) என்பவர் அங்கு பயிலுனராக இணைக்கப் பட்டுள்ள பட்டதாரிகளுடன் தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொண்டு ரூபா ஐம்பத்தினாயிராம் தந்தால் உங்களை ஏதாவது ஒரு திணைக்களத்தில் நிரந்தர நியமனப் பட்டியலில் சேர்த்து கொள்வதற்கு அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் பனிரெண்டாம் ஆம் இலக்கத்தில் போட்டியிட்ட பெண்மணியுமான மட்டக்களப்பினைச் சேர்ந்த பிரதியமைச்சர் கருணா அம்மானின் சகோதரியுமானவரிடம் கதைத்து மேற்குறப்பிட்ட பணத்தினை அவரிடம் வழங்கி தங்களை நிரந்தர நியமன பட்டியலில் சேர்த்துக் கொள்வேன் என கூறி வருகின்றரார்.

இவரின் பேச்சசுக்கு செவிசாய்த்த நான்கு பயிலுனர் பட்டதாரிகள் இவ்வாறு ஆளுக்கு ஐம்பதினாயிரம் வீதம் மேற்குறிப்பிட்ட நபருக்கு வழங்கி தங்களுடைய பெயரினை பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் சேர்த்துள்ளனர்.

ஏனையவர்களிடம் இவர் இதுபற்றி கதைத்த போது “எவ்வளவோ கஷ்டப்பட்டு படித்து நாம் காசு கொடுத்து வேலை எடுக்க வேண்டும் என்றால் அது எவ்வாறு சாத்தியம்? இது ஒருபுறமிருக்க வாக்கு கேட்டு வரும் அம்மையாருக்கு நாங்க காசு கொடுக்க தானா வேண்டும்? அப்படி ஒரு வேலை எமக்கு வேண்டாம்” எனவும் பயலுனர் பட்டதாரிகள் (பயிலுனர் பட்டதாரியான குருமண்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்த கந்தன் -பெயர் மாற்றப்பட்டுள்ளது-) என்பவரிடம் கூறியுள்ளார்கள்.

எது எப்படியோ! எப்படியெல்லாம் அரசியல்வாதிகள் உழைக்கின்றார்கள் இதற்கு நம்மவர்களும் முகவர்களாக செயற்படுகின்றார்கள் என்பதை நினைப்பத்தையிட்டு கவலையாக இருக்கின்றது என பட்டதாரிகள் கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நான் கொண்ட இலட்சியத்தில் உறுதியாக நிற்கின்றேன் விடுதலையின் பின்:- தர்ஷானந்த்
Next post இந்த கட்டுமஸ்தான பாடியைக் காண.. (PHOTOS)