5 வயது சிறுவன் மீது 18 வயது இளைஞன் பாலியல் துன்புறுத்தல்
Read Time:1 Minute, 7 Second
புத்தளம், ஆனைமடு பிரதேசத்தில் ஐந்து வயது சிறுவன் ஒருவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய 18 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் சிறுவனின் அயல் வீட்டில் வசிப்பவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த 13ஆம் திகதி குறித்த இளைஞன் சிறுவன் தனியாக இருந்தபோது வீட்டினுள் அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து அறிந்து கொண்ட சிறுவனின் தாயார் ஆனைமடு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் சந்தேகநபரான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் வைத்திய பரிசோதனைக்காக புத்தளம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Average Rating