கைதி தப்பியோட்டம்
Read Time:58 Second
கைதியொருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று கண்டி, போகம்பறை திறந்தவெளிச்சிறைச்சாலையில் இன்று இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பிரதேசத்தைச்சேர்ந்த 28 வயதுடைய கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். போதைப்பொருள் குற்றச்சாட்டின்பேரில் தண்டனை விதிக்கப்பட்டு போகம்பறை திறந்த வெளிச்சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த கைதியே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார். தப்பிச் சென்ற கைதியை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating