சிலாபம் வீடொன்றில் திடீர் வெடிப்பு: இளைஞனுக்கு எரிகாயம்

Read Time:1 Minute, 25 Second

ANI.bomb.2சிலாபம், திபில்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (18) முற்பகல் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாத குழு ஒன்று குறித்த வீட்டின் மீது வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின்போது ஏற்பட்ட தீயின் காரணமாக காயமடைந்த 28 வயதான மாணிக்கராஜா குமார் என்ற இளைஞன் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த வெடிப்புச் சம்பவத்தை ஏற்படுத்தியமைக்கான காரணமும் அதனை ஏற்படுத்தியவர்கள் தொடர்பிலும் இதுவரை தெரியவரவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார். வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் கண்டியில் வசித்து வருபவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

வெடிப்பு சம்பவம் இடம்பெற்றவேளை வீட்டில் காயமடைந்த இளைஞன் மட்டுமே இருந்துள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கைதி தப்பியோட்டம்
Next post தொடர்ச்சியாக 58 மணிநேரம் முத்தம் கொடுத்து கின்னஸ் சாதனை புரிந்த காதல் ஜோடி!