காட்டுக்குள் சிக்கி சிறுநீர் குடித்து உயிர் தப்பிய இளைஞர் (VIDEO)

Read Time:2 Minute, 32 Second

uk.flagஇங்கிலாந்தைச் சேர்ந்தவன் சாம் உட்ஹெட். 18 வயதான இவர் அவுஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்தில் வசித்து வருகிறான். 2 வாரங்களுக்கு முன்பு அங்குள்ள காட்டுப் பகுதியில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு வேலைக்குப் போயுள்ளார். அங்கிருந்து 2 வாரங்களுக்கு முன்பு ஜாகிங் போவதற்காக காட்டுக்குள் போயுள்ளார். போனவருக்கு திரும்பும் வழி தெரியவில்லை. வழி மாறிப் போய் விட்டார். காட்டுக்குள் வழி தெரியாமல், கொளுத்தும் வெயிலில் சாப்பாட்டுக்குக் கூட வழியில்லாமல் தவித்துள்ளார்.

இதனால் வேறு வழியில்லாமல் தாகத்தைத் தணிக்க தனது சிறுநீரையை குடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். மேலும், தனது டிரவுசர் மற்றும் சட்டையைக் கழற்றி அவசர உதவி கோரி கொடி போல பிடித்தபடி காட்டுக்குள் சுற்றியுள்ளார்.

அவரை மீட்புப் படையைச் சேர்ந்த ஹெலிகப்டரில் வந்தவர்கள் தற்செயலாக மேலிருந்து பார்த்து மீட்டுள்ளனர். மிகவும் கவலைக்கிடமான நிலையில் மயங்கிய நிலையி்ல அந்தப் வாலிபரை மீட்டுள்ளனர். சற்று தாமதித்திருந்தாலும் அவர் உயிரிழந்திருப்பான் என்று மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.

இதில் என்ன கொடுமை என்றால், அவரிடமிருந்த கான்டாக்ட் லென்ஸ் பாக்கெட்களும கூட அவனது தாகத்தைத் தணித்துள்ளன. அதாவது அவரிடம் நிறைய கான்டாக்ட் லென்ஸ்களை வைக்கும் பாக்கெட்கள் இருந்தன.

அதில் உள்ள தண்ணீரையும் விடாமல் குடித்து உயிரைப் பிடித்து வைத்திருந்தார் அந்தப் வாலிபர். கொஞ்சம் கொஞ்சமாக அந்த தண்ணீரையும் குடித்து வந்துள்ளார். அதேபோல சிறுநீரைக்குடித்தும் உயிர் தப்பியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இவரை ஜப்பானின் கவர்ச்சி ஆயுதம் என்றும் சொல்லலாம்!! (PHOTOS)
Next post தந்தையைத் தூக்கில் போட்டால், கைக்குழந்தையுடன் தற்கொலை செய்வேன்!